மார்த்தாண்டம், பிப்.5: களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆன்றோ சிபின் தலைமையிலான போலீசார் கோழிவிளை இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கோழிவிளை அகதி முகாமை சேர்ந்த பார்த்திபன் (30) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
The post களியக்காவிளை அருகே கஞ்சாவுடன் இலங்கை அகதி கைது appeared first on Dinakaran.
