கோத்தகிரி பகுதியில் முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

 

கோத்தகிரி, பிப்.1: கோத்தகிரி அதன்‌ சுற்றுவட்டார பகுதிகளில் முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூக்கல்தொரை, உயிலட்டி, கேர்கம்பை, நெடுகுளா, காக்கா சோலை, குருகத்தி, ஈளாடா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மலைக்காய்கறிகள் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தடுப்பணைகள் மற்றும் ஆறுகளில் சாயத்திற்கு ஏற்றவாறு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் மலைப்பயிர் காய்கறியான முட்டை கோஸ் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தற்போது மழையின் தாக்கம் குறைந்து பனிப்பொழிவு காணப்படுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள முட்டை கோஸ் பயிர்களுக்கு விளைச்சலுக்கு ஏற்றவாறு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் அறுவடைக்கு ஏற்றவாறு முட்டைகோஸ் பயிர் நன்கு வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கும் என்பதால் மலைப்பயிர் விவசாயிகள் அதிகஅளவு முட்டை கோஸ் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

The post கோத்தகிரி பகுதியில் முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Related Stories: