வேன் கவிழ்ந்து 11 பேர் காயம்

எட்டயபுரம், ஜன. 24:கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நேற்று முன்தினம் இரவு 3 குழந்தைகள் 6 பெண்கள் உள்பட 18 பேர், ஒரு வேனில் புறப்பட்டு வந்தனர். வேனை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுரேந்திரன்(44) ஓட்டினார். நேற்று காலையில் எட்டயபுரம் காவல் நிலையம் அருகே வேன் வரும்போது எதிர்பாராதவிதமாக சாலையின் சென்டர் மீடியனில் ஏறி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் (58), கிரிஜா (46), கலைவாணி (52), கவிதா (45), லட்சுமிதா (28), பழனிசாமி (55), சிவக்குமார் (47), தனலட்சுமி (45), பூங்கொடி (45), சாவித்ரி (55), செல்வராஜ் (59) ஆகிய 11 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நிகழ்ந்தபோது சாலையில் வேறு வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழவில்லை. தகவலறிந்த எட்டயபுரம் போலீசார் சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேன் கவிழ்ந்து 11 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: