சேறும் சகதியுமாக காணப்படும் வாரச்சந்தை

 

உடுமலை, ஜன. 22: உடுமலையில் திங்கட்கிழமைதோறும் வாரச்சந்தை கூடுகிறது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் விளைபொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதுதவிர, 50 தினசரி கடைகள் உள்ளன. இங்கு வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். கமிஷன் மண்டிகளும் உள்ளன. கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

ஆனால், சந்தை வளாகம் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. சிறு மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி சேறாக மாறிவிடுகிறது.  இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். நடந்து செல்வோரும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். மேலும், துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் பெருகி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் சந்தை வளாகத்தில் கிராவல் மண் நிரப்பி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சேறும் சகதியுமாக காணப்படும் வாரச்சந்தை appeared first on Dinakaran.

Related Stories: