போடி அருகே குவாரி உரிமையாளரை மிரட்டியவர்கள் மீது வழக்கு

போடி, அக். 26: போடி அருகே குவாரி உரிமையாளரை மிரட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்தவர் புருஷோத்தமன்(36). இவர் தற்போது போடி- தேவாரம் மெயின் ரோடு பாலாஜி நகரில் தங்கி, போடி அருகே உள்ள சிலமலை சேட்டுக்காடு பகுதியில் குவாரி நடத்தி வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று போடி அருகே, சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்த மதன், பிரதீப், அருண்குமார், விஜி, பிரதீஸ் ஆகிய 5 பேர் குவாரிக்குள் அத்துமீறி நுழைந்து லாரிகளை வழிமறித்து பணம் கேட்டு டிரைவர்களை மிரட்டியுள்ளனர்.

இதைப் பார்த்த புருஷோத்தமன், மேலாளர் மணியுடன் அங்கு வந்து அவர்களைக் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அவர்களை அவதூறாக பேசி, அரிவாளைக் காட்டி கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் போடி தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ விஜய் மற்றும் போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

The post போடி அருகே குவாரி உரிமையாளரை மிரட்டியவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: