சொத்து தகராறில் பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டல்: உறவினர் கைது

பெரம்பூர்: ஓட்டேரி பிரிஸ்லி நகரை சேர்ந்தவர் வள்ளி (34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 8ம் தேதி, குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், வள்ளியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த வள்ளி இதுற்றி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், வள்ளியின் தம்பி வழி உறவினரான ஓட்டேரி பிரிஸ்லி நகர் 5வது தெருவை சேர்ந்த தனவேந்தன் (30), அந்த ஆபாச படங்களை அனுப்பியது தெரிந்தது. தனவேந்தன் குடும்பத்திற்கும், வள்ளி குடும்பத்திற்கும் சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக, வள்ளி வீட்டின் அருகாமையில் குடியிருக்கும் பெண் ஒருவர் வீட்டில் வள்ளி குளிக்கும் போது, உடை மாற்றும் போது புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதை தனவேந்தனுக்கு அனுப்பியதும், தனவேந்தன் அந்த புகைப்படங்களை வள்ளிக்கு அனுப்பி அவரை மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து தனவேந்தனை நேற்று கைது செய்து, அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வள்ளியின் ஆபாச புகைப்படங்களை தனவேந்தனுக்கு அனுப்பிய பெண் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சொத்து தகராறில் பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டல்: உறவினர் கைது appeared first on Dinakaran.

Related Stories: