நீதிமன்றத்தில் ஆஜராகாத இரண்டு ரவுடிகள் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி சர்மா நகர் 16வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (எ) பாக்சர் சுரேஷ் (40). புளியந்தோப்பு கே.எம். கார்டன் 7வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (எ) எலி சுரேஷ் (44). இவர்கள் மீது புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

இருவரும் வழக்கு ஒன்றில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இதையடுத்து இவர்களை பிடிக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்பேரில், பேசின் பிரிட்ஜ் போலீசார் நேற்று முன்தினம் பாக்சர் சுரேஷ் மற்றும் எலி சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post நீதிமன்றத்தில் ஆஜராகாத இரண்டு ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: