வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகர் – சரஸ்வதி நகர் பிரதான சாலை, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கேசவன் (33). குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, கடந்த 22ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிக்சை பெற்று, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த சுமார் 30 சவரன் நகைகள், ரூ.5 ஆயிரம் ஆகியவை கொள்ளை போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் ேபரில் சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: