மாணவர் விடுதியில் லேப்டாப் திருட்டு

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் அருகே கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில், அறையின் பூட்டை உடைத்து லேப்டாப் திருடுபோன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோழிங்கநல்லூர், வால்பகதூர் சாஸ்திரி தெருவில் கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதி செயல்படுகிறது.

இந்த, விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் ஜெயகணேஷ் (20), ரித்தீஷ் (19) ஆகியோர், வழக்கம்போல் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு, மாலை விடுதிக்கு வந்தனர். அப்போது, விடுதியில் அவர்கள் தங்கியுள்ள அறைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, 2 பேரின் லேப்டாப் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாணவர் விடுதியில் லேப்டாப் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: