பைக் மீது கன்டெய்னர் லாரி மோதி உடல் நசுங்கி வாலிபர் பலி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் பைக் மீது கன்டெய்னர் லாரி மோதியதில், வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். பெரிய காஞ்சிபுரம், உப்பேரி குளம் தெருவை சேர்ந்தவர் கிரிதரன் (19). ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் பகுதியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மினி லோடு வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று காலை வேலை முடிந்து தனது பைக்கில் சென்னை – பெங்களூர தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் விஆர்பி சத்திரம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கண்டெய்ன்ர் லாரி, பைக் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த கிரிதரன் மீது லாரி ஏறி இறங்கியதில், அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், கிரிதரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி தப்பியோடிய லாரி டிரைவர் தேடி வருகின்றனர்.

The post பைக் மீது கன்டெய்னர் லாரி மோதி உடல் நசுங்கி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: