வாலாஜாபாத்தில் கனரக லாரி மோதி மின் வாரிய ஊழியர் பலி

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் கனரக லாரி மோதி முன்னாள் மின் வாரிய ஊழியர் பரிதாபமாக பலியானார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த அளவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிகன் (65). இவர், ஓய்வு பெற்ற மின் வாரிய துறை அலுவலர். கடந்த 17ம் தேதி தேசிகனும், அவரது நண்பரும் பைக்கில் காஞ்சிபுரத்திற்கு சொந்த வேலை காரணமாக சென்று வாலாஜாபாத் வழியாக மீண்டும் சொந்த ஊரான அளவூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வாலாஜாபாத் மாசிலாமணி மேல்நிலைப்பள்ளி எதிரே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கனரக லாரி முந்தி செல்ல முயன்றபோது தேசிகனின் இருசக்கர வாகனத்தை உரசி சென்றது.

இதில், நிலை தடுமாறிய தேசிகன் மற்றும் அவரது நண்பர் இருவரும் கீழே விழுந்தநிலையில் தேசியகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வாலாஜாபாத்தில் கனரக லாரி மோதி மின் வாரிய ஊழியர் பலி appeared first on Dinakaran.

Related Stories: