முதலமைச்சர் கோப்பை விளையாட்டில் சிறப்பிடம் புள்ளம்பாடி அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு

லால்குடி, அக்.23: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற புள்ளம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்நிலையில் புள்ளம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில் குழுவில் கலந்து கொண்டு விளையாடிய மாணவன் அஜய் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து பள்ளியில் நடந்த பாராட்டு விழாற்கு தலைமை ஆசிரியர் சரவணவேல் தலைமை வகித்தார். விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நித்தியா, நிர்வாக குழு உறுப்பினர் ஹென்றி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் கோமாக்குடி ஆசை தம்பி மற்றும் ஆசிரியர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவன் அஜய்க்கு சான்றிதழ் வழங்கியும், சால்வை அணிவித்தும் பாராட்டினர். பள்ளி ஆசிரியர் ஜெயராமன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டில் சிறப்பிடம் புள்ளம்பாடி அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: