பிஎஸ்என்எல் லோகோ காவி நிறத்திற்கு மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஒன்றிய பாஜ ஆட்சியில் வந்தே பாரத் ரயில், டி.டி. நியூஸ் தொலைக்காட்சி லோகோவை மாற்றியதை தொடர்ந்து தற்போது, பி.எஸ்.என்.எல். லோகோவையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,’பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார் துறையை விட லாபம் ஈட்டுகிற நிறுவனமாக மாற்ற முடியாத மோடி அரசு அதை காவி மயமாக்குகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது’ என்று தெரிவித்துள்ளார்.
The post இந்தியாவுக்கு பதில் பாரத்; பிஎஸ்என்எல் லோகோ காவி நிறத்திற்கு மாற்றம்: காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.