எரிந்து கொண்டிருக்கும் அதிமுகவை அணைக்க எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்யட்டும்: முத்தரசன் பேட்டி

திருச்சி: திமுக கூட்டணியை பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு எரிந்து கொண்டு இருக்கும் அதிமுகவை அணைக்க எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்யட்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பயிலரங்கம் தொடங்குகிறது. இந்த பயிலரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு புத்தகம் வெளியிடப்பட்டது.

திமுக கூட்டணியில் இருந்து தோழமை கட்சிகள் வெளியேற வேண்டும் என்பது எடப்பாடி ஆசையாக இருக்கிறது என்றும் திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை நாங்கள் ஒற்றுமையோடு இருக்கிறோம். கூட்டணி தொடரும் என்றும் முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

சீமான் சொல்வது நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்து பாடலை மாற்றி விடுவேன் என்று கூறியுள்ளார். அவர் ஆட்சிக்கு வந்தால் அது மாற்றட்டும். இப்போது இருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவர் மதிக்க வேண்டும். தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒப்பந்த தொழிலார்கள் அனைவரும் நிரந்தர பணியாளர்களாகயாக்க வேண்டும் என்றும் குறிப்பாக தூய்மை பணியாளர், செவிலியர் ஆகிய அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுத்தியுள்ளார். அனைத்து பிரச்சனைகளிலும் தமிழ்நாடு அரசு சுமுகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

The post எரிந்து கொண்டிருக்கும் அதிமுகவை அணைக்க எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்யட்டும்: முத்தரசன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: