கடலூர் : கடலூரில் 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக் கூடிய புதிய துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளது. விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. மத்திய பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக் கூடிய வகையில் பசுமை துறைமுகமாக இது அமைய உள்ளது.