விரைந்து வந்த கோவை தெற்கு தீயணைப்பு துறையினர் ஆம்னி வேனில் பற்றிய தீயை முழுமையாக அணைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனத்தின் உரிமையாளர் யார். எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. 3 பெட்ரோல் பங்க்கள் இருக்கக்கூடிய பகுதியில் எரிவாயு மையத்திலேயே திடீரென ஆம்னி வேன் தீ பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தீ விபத்து ஏற்பட்ட உடனேயே எரிபொருள் மையத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வெளியேறினர். மேலும் அப்பகுதியில் வாகனங்கள் செல்லாதவாறு போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லும் சாலை வழியாகவே இயக்க அனுமதிக்கப்படவில்லை.
The post கோவை உக்கடம் அருகே எரிவாயு நிரப்ப வந்த காரில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.