அருமனை அருகே ஓட்டல் உரிமையாளர் மாயம்

அருமனை, அக்.22: அருமனை அருகே மாயமான ஓட்டல் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். அருமனை மேல்புறம் அண்டுகோடு அருகே காளிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜ் (50). அந்த பகுதியில் உள்ள சந்தை அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இந்தநிலையில் ராஜ் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அதனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்தநிலையில் கடந்த 17ந் தேதி ஒருவரிடம் பணம் வாங்கிவிட்டு வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது மகன் ரதீஷ் (24) அருமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஓட்டல் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

The post அருமனை அருகே ஓட்டல் உரிமையாளர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: