தஞ்சையில் குறைதீர் கூட்டத்தில் 381 மனுக்கள் பெறப்பட்டன

 

தஞ்சாவூர், அக. 22: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம். கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 381 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.

இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டார்.கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சங்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ரவிச்சந்திரன், தாட்கோ மேலாளர் ரெங்கராஜன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சையில் குறைதீர் கூட்டத்தில் 381 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Related Stories: