பெரம்பலூரில் மா.கம்யூ., ஆலோசனை கூட்டம்

 

பெரம்பலூர், அக்.22: பெரம்பலூரில் டிசம்பர் 3, 4 தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 வது மாவட்ட மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் துறை மங்கலம் பகுதியிலுள்ள மார்க்.கம்யூ.கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமை வகித்தார். நகர செயலாளர் இன்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், செல்லமுத்து, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கலையரசி, ராஜேந்திரன், அகஸ்டின், ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். சிறப்பு விருந்தினராக மாநிலக் குழு உறுப்பினர் சாமிநடராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார். இதில் பெரம்பலூரில் டிசம்பர் 3, 4ம் தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 வது மாவட்ட மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மாநாடு வரவேற்பு குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி வரவேற்புக் குழு தலைவராக செல்லத்துரை, செயலாளராக இன்பராஜ், பொருளாளராக கருணா நிதி, துணைத் தலைவர்களாக கலையரசி, டாக்டர் கருணாகரன், அகஸ்டின், ரெங்கராஜ், துணை செயலாளர்களாக ரெங்கநாதன், ராஜேந்திரன், பெரியசாமி உட்பட 51பேர் கொண்ட வர வேற்புக் குழு அமைக்கப்பட்டது.

The post பெரம்பலூரில் மா.கம்யூ., ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: