முத்துப்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி விவசாயி படுகாயம்

 

முத்துப்பேட்டை, அக். 24: முத்துப்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி விவசாயி படுகாயடைந்தார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி கடைத்தெருவில் நேற்று முன்தினம் குலமாணிக்கம் கிராமத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற அரசு பேருந்து, இரு சக்கர வாகனத்தில் சென்ற வடசங்கேந்தி தெற்கு தெருவை சேர்ந்த குணசேகரன் (44) என்ற விவசாயி மீது மோதியது, இதில் பலத்த காயமடைந்த குணசேகரன், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து எடையூர் இன்ஸ்பெக்டர் (பொ) செந்தில்குமார், அரசு பேருந்து ஓட்டுனர் கீழப்பெருமழையை சேர்ந்த சுப்பையன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post முத்துப்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி விவசாயி படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: