சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

 

விருதுநகர், அக்.22: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ நந்தகுமார் தலைமையில் பொது நிறுவனங்கள் குழு இன்று விருதுநகர் வருகை தருகிறது.  இக்குழு விருதுநகர் சுற்றுலா மாளிகையில் காலை 10 மணியளவில் கலெக்டர் தலைமையில் குழு உறுப்பினர்களுடன் கூடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம், தொழில் முன்னேற்ற நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளது. மாலை 3 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ள ஆய்வுகூட்டத்தில் தணிக்கை மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட உள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: