துறையூரில் 331 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்

 

துறையூர், அக்.22: திருச்சி மாவட்டம் துறையூரில் 331 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை ஸ்டாலின் குமார் எம்எல்ஏ வழங்கினார். துறையூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 274 மாணவிகளுக்கும், செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 57 மாணவ , மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, நகர்மன்ற உறுப்பினர்கள் சுதாகர், இளையராஜா, பாஸ்கர், அம்மன் பாபு, ரோட்டரி சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post துறையூரில் 331 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் appeared first on Dinakaran.

Related Stories: