அரியலூர் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

தா.பழூர், அக். 21: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் தனச்செல்வன் தலைமையிலான காவல்துறையினர் கோரைக்குழி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கோரைக்குழியில் உள்ள பேருந்து நிழற்குடையில் உட்கார்ந்திருந்த கோரைக்குழி வடக்கு தெருவை சேர்ந்த சாமிதுரை மகன் விக்னேஷ் (24)என்பவரை விசாரணை மேற்கொண்டனர். அப்போது சோதனை செய்ததில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கஞ்சாவை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விக்னேஷ் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர் .

The post அரியலூர் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: