திருத்தணி கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நியமனம்: தலைமை அறிவிப்பு

 

திருத்தணி அக். 21: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திரு­வள்­ளூர் மேற்கு மாவட்­டம் திருத்­தணி கிழக்கு ஒன்­றி­யச் செய­லா­ளர் ஆர்த்தி ரவி சரி­வர கட்சி பணியாற்றாத கார­ணத்­தால், அவரை அப்­பொ­றுப்­பி­லி­ருந்து விடு­வித்து, கட்சி பணி­கள் செவ்­வனே நடை­பெற அவ­ருக்­குப் பதி­லாக, வி.கே.ஆர்.புரம், பொந்­தால கண்­டிகை கிரா­மத்தைச் சேர்ந்த கே.ரா­ஜேந்­தி­ரன் திருத்­தணி கிழக்கு ஒன்­றி­ய திமுக பொறுப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­ப­டு­கி­றார். ஏற்­க­னவே தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஒன்றிய திமுக அமைப்­பின் பிற நிர்­வா­கி­கள் இவ­ரு­டன் இணைந்து பணி­யாற்­று­மாறு கேட்­டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பொறுப்பாளர் கே.ராஜேந்திரன் திருத்தணி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகளுடன் திருத்தணியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர், திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு எம்எல்ஏ சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கட்சி பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்று அறிவுறை கூறினார். சந்திப்பின் போது வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கிஷோர், ஒன்றிய திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

The post திருத்தணி கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நியமனம்: தலைமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: