கம்பம் அருகே மின் கம்பங்கள் மீது மரம் சாய்ந்ததால் பரபரப்பு

 

கம்பம், அக். 21: கம்பம் 11வது வார்டு கம்பமெட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அபுதாகிர் (57) இவர் கம்பம் மெயின் ரோட்டில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் உள்ள பாக்கு மரத்தினை கூலிக்கு ஆள் வைத்து நேற்று காலை அப்புறப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாக்கு மரம் போக்குவரத்து மிகுந்த கம்பமெட்டு சாலையில் விழுந்தது. பாக்கு மரம் விழுந்ததில் ஐந்து மின்கம்பங்கள் மற்றும் ஒரு ட்ரான்ஸ்பார்மர் முழுமையாக சேதம் அடைந்தது.

மேலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கம்பமெட்டு ரோட்டில் போக்குவரத்து தடைப்பட்டது. சேதமடைந்த மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு சேதமடைந்த மின்சார பொருட்களுக்கு உரிய அபதாரத் தொகையை வசூலித்து சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்ம்களையும் சரி செய்தனர். மேலும் இச் சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கம்பம் அருகே மின் கம்பங்கள் மீது மரம் சாய்ந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: