விசிகவினர் மறியலில் ஈடுபட முயற்சி

 

புவனகிரி, அக். 21: புவனகிரி அருகே உள்ளே மஞ்சக்கொல்லை கிராமத்தில், பஸ் நிறுத்தம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் நடப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன், இந்த கொடி கம்பம் மர்ம நபர்களால் வெட்டி திருடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசிக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கொடிக்கம்பம் திருடப்பட்டு பல நாட்களாகியும் இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்காத போலீசாரைக் கண்டித்து நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மஞ்சக்கொல்லை கிராமத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

பின்னர் புவனகிரி காவல் நிலையத்தில் சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக்குடன் விசிக நிர்வாகிகள் ஆலோசனை நிறுத்தினார்.அப்போது, ஏற்கனவே இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது, என கூறினார். இதனால் சமாதானம் அடைந்த விசிகவினர் கலைந்து சென்றனர்.

The post விசிகவினர் மறியலில் ஈடுபட முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: