நிலக்கோட்டை மைக்கேல்பாளையத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

நிலக்கோட்டை, அக். 18: நிலக்கோட்டை ஒன்றியம் மைக்கேல்பாளையத்தில் உள்ள ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் ஜோஸ்பின் சந்திராமேரி தலைமை வகித்தார். தாளாளர் வின்சென்ட் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகாலபாண்டியன் முன்னிலை வகித்தனர், உதவி தலைமை ஆசிரியர் ஜான் ஜேசுதாஸ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கீதா, ஊராட்சி செயலர் பாண்டியராஜன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் ஜான்போஸ்கோ, அம்மையநாயக்கனூர் பேரூர் செயலாளர் விஜயக்குமார், ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜாங்கம், வேல்முருகன், செல்வம், பாலசந்திரன், மலையாளம் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். முதுகலை ஆசிரியர் செல்வராஜேந்திரன் நன்றி கூறினார்.

The post நிலக்கோட்டை மைக்கேல்பாளையத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: