சீதபற்பநல்லூரில் அக்.22ல் முன்னோடி மனு பெறும் முகாம் கலெக்டர் கார்த்திகேயன் தகவல்

நெல்லை, அக். 18: நெல்லை தாலுகா, சீதபற்பநல்லுார் கிராமத்தில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் நவ.21ம் தேதி நடக்கிறது. எனவே, அதற்கு முன்னோடியாக வருகிற 22ம் தேதி சீதபற்பநல்லுார் கிராமத்தில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து காலை 10 மணி முதல் 1 மணி வரை மனுக்கள் பெறப்படுகிறது. முகாமில் நெல்லை ஆர்டிஓ, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படுகிறது. முகாம் நிறைவடைந்த பிறகு அன்று பிற்பகல் அந்த கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், இந்தக் குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. எனவே, ஆய்வுக் குழுவிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post சீதபற்பநல்லூரில் அக்.22ல் முன்னோடி மனு பெறும் முகாம் கலெக்டர் கார்த்திகேயன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: