இதுகுறித்து தமிழக அதிகாரிகள் கூறுகையில், 13 பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி வழங்காதது குறித்து, கேரள அதிகாரிகளிடம் கேட்டும் தரவில்லை. கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்காத நிலையில், அணையை ஆய்வு செய்வது சரியல்ல என துணைக்குழு தலைவரிடம் தெரிவித்து விட்டு ஆய்வுப்பணியை புறக்கணித்தோம் என்றனர். இதனிடையே அணை ஆய்வுக்கு வந்த துணைக்குழுவினரை சந்தித்து மனு அளிக்க வந்த பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினரை கூடலூர் அருகே லோயர்கேம்ப் சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்திவிட்டனர்.
The post முல்லை பெரியாறு அணையில் துணைக்குழுவினரின் ஆய்வை தமிழக அதிகாரிகள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.