சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக முதற்கட்டமாக 500 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இந்த சுற்றுச்சூழல் பற்றிய பரப்புரையை முன்னெடுப்பார்கள் என்றும் இதற்காக அவர்களுக்கு மின் ஆட்டோ வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் , சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் “காலநிலை மாற்ற வீராங்கனைகள்” திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதில், 100 மின்சார ஆட்டோ வாங்க ரூ.3.77 கோடியும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக 10.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post காலநிலை மாற்ற வீராங்கனைகள்’ திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.
