குடிநீர் குழாய் பணிக்கு தோண்டிய மெகா பள்ளம்

 

போடி, அக். 16: போடி-தேவாரம் சாலையில் உள்ள ஜீவா நகர் பகுதியில் இருவாரங்களுக்கு முன்பு குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாகி தெருக்களில் சென்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சியிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போடி நகராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியில் பள்ளம் தோண்டி உடைந்த குழாயை மாற்றி புதிய குழாயை பொருத்தினர். சோதனை நிறைவடைந்த பின்பு சில நாட்களில் பள்ளம் சீரமைக்கப்படும் என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்னமும் பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. நடந்து செல்வோரும் சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் அந்தப் பகுதியில் நடந்து சென்று வருவதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் அடிக்கடி மழை பெய்து வருவதால் அசம்பாவிதம் நேரிட வாய்ப்புள்ளது. இதனால் அந்தப் பள்ளத்தை உடனடியாக மூடி சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குடிநீர் குழாய் பணிக்கு தோண்டிய மெகா பள்ளம் appeared first on Dinakaran.

Related Stories: