வீட்டிற்குள் ரத்தம் வழிந்த நிலையில் வாலிபர் சாவு

 

கோவை, அக்.15: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (44). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். சரவணம்பட்டி மருதம் நகரில் உள்ள தங்கும் விடுதியில் 3வது மாடியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் இவரது நிறுவனத்தினர் செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை, வேலைக்கும் வரவில்லை. அப்போது தமிழரசனின் நண்பர் ஒருவர் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தார்.

அப்போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தமிழரசன் வாயில் ரத்தம், நுரை வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். நோய் பாதிப்பில் இறந்தாரா, தற்கொலை செய்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

The post வீட்டிற்குள் ரத்தம் வழிந்த நிலையில் வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: