கோவை, மார்ச் 17: தேர்தல் தொடர்பான பொதுமக்களின் புகாருக்கு 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் பவன்குமார், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், துணை கமிஷனர் தேவநாதன், தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
