திமுக இளைஞர் அணி சார்பில் பேச்சுப் போட்டி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 20ம் தேதி பிரமாண்ட பரிசளிப்பு விழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை: கலைஞரின் நூற்­றாண்டை, கொள்­கைத் திரு­வி­ழா­வா­கக் கொண்­டா­டும் வகை­யில், திமுக இளைஞர் அணி சார்பில் ‘என் உயி­ரி­னும் மேலான..!’ என்ற பெயரில் பேச்­சுப் போட்டி மாநி­லம் தழு­விய போட்­டி­யாக நடைபெற்று வருகிறது. சென்னை மண்­ட­லத்­துக்­கான போட்டி அன்­ப­கத்­தில் நடை­பெற்­றது. இந்த நிகழ்ச்­சி­யில் துணை முத­ல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்­து­ கொண்டு போட்­டி­யா­ளர்­களை வாழ்த்திப் பேசினார். அப்­போது அவர் பேசியதா­வது: கலை­ஞரின் நூற்­றாண்டு விழா­வை­யொட்டி, முத­ல்வர் இளை­ஞர் அணிக்கு மூன்று பொறுப்­பு­கள் கொடுத்தார். அதில் மிக­மிக முக்­கி­ய­மான பொறுப்­பு­தான் இந்­தப் பேச்­சுப்­போட்டி. தேர்­தல் நேரம், மற்ற பணி­க­ளால் போட்­டியை நடத்தி முடிக்க கொஞ்­சம் தாம­த­மா­கி­விட்­டது. இருந்­தா­லும், இவ்­வ­ளவு பெரிய வரவேற்பு கிடைக்­கும் என்று, எதிர்­பார்க்­கவே இல்லை. கிட்­டத்­தட்ட 17 ஆயி­ரம் பேர் தமிழ்­நாடு முழுக்க விண்­ணப்­பித்­திருந்தார்கள்.

முதல் பரிசு ரூ1 லட்­சம், இரண்­டா­வது பரிசு ரூ75 ஆயி­ரம், மூன்­றாம் பரிசு ரூ.50 ஆயி­ரம் என அறி­வித்­தோம். கலந்­து­கொண்ட அனை­வ­ருக்­கும் அதா­வது 17 ஆயி­ரம் பேருக்­கும் பரிசு கொடுக்க எனக்கு ஆசை­தான். இருந்தாலும், பரிசு கொடுக்க முடி­யாது. தமிழ்­நாட்­டின் நிதி நிலைமை எப்­படி இருக்­கி­றதோ அதே­போல்­தான் இளை­ஞர் அணி நிதி நிலை­மை­யும் இருக்­கி­றது. அத­னால், அடுத்த முறை இந்­தப் பரி­சுத்­தொகை இன்­னும் அதி­கப்­ப­டுத்­தப்­ப­டும். திமுக பேசி, எழுதி, வளர்ந்த இயக்­கம். அந்­தத் தொடர்பை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில்­ இது போன்ற போட்­டி­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. வரு­கின்ற 19ம் தேதி இந்­தப் போட்­டிக்­கான இறு­திப்­ போட்­டி­யும், 20ம் தேதி முத­ல்வர் மு.க.ஸ்டாலின் கைக­ளால் முதல் மூன்று இடங்­க­ளைப் பிடிக்­கும் பேச்­சா­ளர்­க­ளுக்­கான பரி­சும் வழங்­கப்­பட இருக்­கி­றது. இவ்­வாறு அவர் பேசினார்.

The post திமுக இளைஞர் அணி சார்பில் பேச்சுப் போட்டி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 20ம் தேதி பிரமாண்ட பரிசளிப்பு விழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: