சூதாடிய 15 பேர் கைது

தர்மபுரி, அக்.15: மொரப்பூர் போலீஸ் எஸ்ஐ நந்தினி தலைமையிலான போலீசார், தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ராமாபுரம் சென்றாயன் பகுதியில், பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த ஆதிமூலம் (41), சுரேஷ் (41), சதிஷ் (41) ஆகிய 3பேரை கைது செய்தனர். பாலக்கோடு போலீஸ் எஸ்ஐ கோகுல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வாழைத்தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய கிருஷ்ணமூர்த்தி (46), ஆனந்தன் (38), அருள் (35), முனியப்பன் (48), கணேசன் (33) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அதே போல், காரிமங்கலம் போலீஸ் எஸ்ஐ ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார், பெரியாம்பட்டி சமத்துவபுரம் பகுதியில் சூதாடிய மாதேஷ்வரன் (52), செல்வராஜ் (45), முனியப்பன் (61) ஆகிய 3பேரை கைது செய்தனர். மாரண்டள்ளி எஸ்ஐ னிவாசன் மற்றும் போலீசார், எம்.செட்டிஹள்ளி ஏரிக்கரையில் சூதாடிய குமார் (46), சக்திவேல் (32), அசோக் (33), வடிவேல் (33) ஆகிய 4பேரை கைது செய்தனர்.

The post சூதாடிய 15 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: