திருவள்ளூர்: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 10 பேருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சிக்னல், என்ஜினியர் துறையை சேர்ந்த 10 பேர் இன்று ஆஜராக ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பினர். போல்டு, நட்டு கழன்ற நிலையில் அது குறித்து சந்தேகம் எழுந்ததால் விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பப்பட்டது. ரயில்வே துறை சார்பில் ஏற்கெனவே 16 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மேலும் 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
The post கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 10 பேருக்கு ரயில்வே காவல்துறை சம்மன்..!! appeared first on Dinakaran.