மது விற்ற மூதாட்டி கைது

 

ரெட்டியார்சத்திரம், அக். 14: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.பண்ணப்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் முத்தம்மாள் (55). இவர் அப்பகுதியில் மது விற்பனை செய்வதாக கன்னிவாடி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அவர் வீட்டின் அருகே சென்று பார்த்தபோது துணி பைகளில் மதுபாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பையில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

The post மது விற்ற மூதாட்டி கைது appeared first on Dinakaran.

Related Stories: