திருச்சியில் அருகே உள்ள செங்கற் சூலையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட கல்கள் தொடர் மழை காரணமாக சேதம்

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் கல்லணை சாலை பகுதியில் திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர் சீலி, பொன்னுரங்கபுரம் உள்ள பகுதிகளில் குருவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அப்படி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்பொழுது அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள குருவை நெற்பயிர சாய்ந்து தரையில் தண்ணீரில் உள்ளது. இதனால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதேபோல் பொன்னுரங்கபுரம் பகுதியில் செங்கற் சூலைகள் பெரிய அளவில் உள்ளது. இது தொடர் மழை காரணமாக செங்கர் சூலையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட கல்கள் தொடர் மழை காரணமாக தண்ணீர் கிடந்து சேதம் ஆகிறது. இதனால் செங்கல் சூளை உரிமையாளர்களும் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருச்சியில் அருகே உள்ள செங்கற் சூலையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட கல்கள் தொடர் மழை காரணமாக சேதம் appeared first on Dinakaran.

Related Stories: