கொரடாச்சேரி அருகே ஆற்றில் அழுகிய சடலம் மீட்பு கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

 

நீடாமங்கலம், அக்.11: கொரடாச்சேரி அருகே அழுகிய நிலையில் ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் சரகம், கண்கொடுத்தவணிதம் என்ற இடத்தில் பாண்டவையாற்று கரையின் வடபுறத்தில் நேற்று முன்தினம் ஒரு ஆண் சடலம் மிதந்து வருவதாக அப்பகுதியினர் கிராம நிர்வாக அலுவலர் தங்கபாண்டியனுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, விஏஓ., கொரடாச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் தங்கபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் இறந்து மிதந்து வந்தவர் 40 வயது மதிக்கத் தக்க இளைஞர். இவர், வெள்ளை சட்டை அணிந்து உள்ளார். இவர், தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கொரடாச்சேரி அருகே ஆற்றில் அழுகிய சடலம் மீட்பு கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: