கொலைமிரட்டல் விடுத்த பெண் மீது வழக்கு

 

ஆண்டிபட்டி, அக். 11: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்தவர் முனியாண்டி(44). இவர் நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் அபிவிருத்திக்காக அதே பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவரின் மனைவி சங்கீதாவிடம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் கடனாக பெற்றதாக தெரிகிறது. இதில் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும் மீதமுள்ள பணத்தை கொடுக்க முடியாமல் இருந்ததால் சங்கீதா அவரது வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனியாண்டி கடந்த மாதம் 30ம் தேதி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஆண்டிபட்டி போலீசார் சங்கீதா மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கொலைமிரட்டல் விடுத்த பெண் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: