குட்கா பதுக்கிய 2 பேர் கைது

 

திருமங்கலம், அக். 11: திருமங்கலத்தில், உசிலம்பட்டி ரோட்டில் உள்ள குடோனில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ ஜெயக்குமார் தலைமையில் சென்ற போலீசார், குடோனில் சோதனை செய்தனர் .அப்போது அங்கு சாக்கு மூட்டைகளில் 99 கிலோ குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அவற்றை பதுக்கிய சுங்குராம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்(44), கற்பகநகரை சேர்ந்த கண்ணன்(45) ஆகியோரை கைது செய்தனர்.

The post குட்கா பதுக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: