முரசொலி செல்வத்தின் மறைவு செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்: செல்வப்பெருந்தகை இரங்கல்

சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திராவிட இயக்க முன்னோடியும், கலைஞர் அவர்களின் மருமகனுமான முரசொலி செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். முரசொலி பத்திரிகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி அந்நாளிதழை மேம்படுத்தியவர்.

முரசொலி பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்தவர். முரசொலியில் சிலந்தி என்ற பெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதி, திராவிட இயக்க கொள்கைகளை பரப்பியவர். முரசொலிக்கு எதிரான ஆட்சியாளர்களின் அடக்குமுறையையும், வழக்குகளையும் துணிவுடன் எதிர்கொண்டவர். திரு. முரசொலி செல்வம் அவர்களது மறைவு திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், முரசொலி நாளேட்டிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்

அன்னாரை இழந்து வாடும் தமிழ்நாட்டின் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.கழக நண்பர்களுக்கும் மற்றும் முரசொலி ஆசிரியர் குழுவினர் மற்றும் பணியாளர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post முரசொலி செல்வத்தின் மறைவு செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்: செல்வப்பெருந்தகை இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: