குட்கா பதுக்கிய கடைகளுக்கு சீல்

காரிமங்கலம், அக்.9: காரிமங்கலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த கோபால் மற்றும் அலுவலர்கள், போலீசார், காரிமங்கலம் கடைவீதி பகுதியில் உள்ள பீடா கடை மற்றும் அனுமந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மளிகை கடை ஆகிய 2 கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததுடன் 2 கடைகளுக்கும் தலா ₹25 ஆயிரம் அபராதம் விதித்து கடைகளுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து காரிமங்கலம் பைபாஸ் ரோடு பொம்மஅள்ளி பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

The post குட்கா பதுக்கிய கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: