மேத்தால் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம்

 

பாடாலூர், அக்.8: ஆலத்தூர் தாலுகா மேத்தால் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இரண்டாம் பருவ இலவச பாட புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வரை பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இலவச பாடப் புத்தகங்கள், பாடத்திற்கான குறிப்பேடுகள், எண்ணும் எழுத்தும் பயிற்சி ஏடுகள் ஆகியவை வழங்கப்பட்டது. இதனை மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் இந்திரா தேவி, பள்ளி ஆசிரியர்கள், ஜெயந்தி, கல்பனா, அன்பழகன், சதீஷ்குமார், உஷா, மாணவ-மாணவிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post மேத்தால் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம் appeared first on Dinakaran.

Related Stories: