ஏரல் வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு மஞ்சப்பை

ஏரல், அக்.8: ஏரல் பகுதியை நெகிழியில்லா பேரூராட்சியாக மாற்றும் வகையில் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கு பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் மஞ்சப்பை வழங்கினார். ஏரல் பேரூராட்சியினை நெகிழியில்லா பேரூராட்சியாக மாற்றம் செய்திடும் பொருட்டு ஏரல் வாரச்சந்தையில் காய்கனி மற்றும் பொருட்கள் நேற்று வாங்க வந்த பொதுமக்களுக்கு பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன், மஞ்சப்பைகளை வழங்கி, தீங்கு விளைவிக்கின்ற பிளாஸடிக் நெகிழி பைகளை தவிர்த்திட வேண்டும் என கேட்டுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் மணிவண்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஏரல் வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு மஞ்சப்பை appeared first on Dinakaran.

Related Stories: