தேவநல்லூர் சிறப்பு மருத்துவ முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை

களக்காடு, அக்.4: தேவநல்லூரில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. களக்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தேவநல்லூரில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆர்த்தி, பிடிஓ பொன்லெட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் எட்வின், ஊராட்சி செயலாளர் முத்துக்குமார், ஆசிரியர் செல்வகுமார், சுகாதார ஊக்குநர்கள் நிரோஷா, பாப்பா, ஜீலியட்ராணி, மீனா, ஷீலா, அஜிஷா, ஈஸ்வரி, கலையரசி, செல்வி, தங்கபுஷ்பம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் தேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சற்குணம் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.

The post தேவநல்லூர் சிறப்பு மருத்துவ முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை appeared first on Dinakaran.

Related Stories: