மெட்ரோ ரயில் நிலையத்தில் காவலரை தாக்கிய போதை ஆசாமி

 

சென்னை, செப்.30: வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கிய போதை ஆசாமியை போலீசார் கைது ெசய்தனர். வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் 3வது பட்டாலியனை சேர்ந்த காவலர் சிலம்பரசன் (23), நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் போதையில் தள்ளாடியபடி மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார். இதை கவனித்த காவலர் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தினர்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, காவலர் சிலம்பரசன் மீது தாக்குதல் நடத்தினர். உடனே காவலர் சம்பவம் குறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்படி விரைந்து வந்த போலீசார் போதை ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், பட்டாபிராமை சேர்ந்த ஆகாஷ் (25) என்றும், நண்பர் ஒருவர் அளித்த மது விருந்தில் கலந்து கொண்டுவிட்டு வீட்டிற்கு செல்ல வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ஆகாஷ் மீது காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

The post மெட்ரோ ரயில் நிலையத்தில் காவலரை தாக்கிய போதை ஆசாமி appeared first on Dinakaran.

Related Stories: