ராகுல் காந்தி நாட்டை வழி நடத்துவார்: சச்சின் பைலட்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், நேற்று அளித்த பேட்டியில் ராகுல் காந்தி மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னணியில் நின்று வழிநடத்துகிறார். அரசாங்கத்திடம் பதில் இல்லாத பொருத்தமான கேள்விகளை அவர் கேட்கிறார். அவர் மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் மட்டும் அல்ல, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணை க்கும் தலைவர்.ராகுல் காந்தி மக்களின் முக்கியமான பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கிறார்.

நாங்கள் அனைவரும் ராகுல் காந்தியை நாட்டை வழிநடத்தும் ஒரு தலைவராகப் பார்க்கிறோம், அடுத்த தேர்தல் நடக்கும்போது, ​​இந்திய மக்களும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ராகுல் காந்தியின் பின்னால் ஒற்றுமையாக நிற்கும். நடைபெற உள்ள அரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக பெரிய வெற்றியை பெறும். அதை தொடர்ந்து நடைபெற உள்ள மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்’’ என்றார்.

 

The post ராகுல் காந்தி நாட்டை வழி நடத்துவார்: சச்சின் பைலட் appeared first on Dinakaran.

Related Stories: