இந்தி ரீமேக்கில் ஆனந்தி படம்

தமிழில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. கடந்த 2018ல் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு, பூ ராமு நடிப்பில் திரைக்கு வந்த படம், ‘பரியேறும் பெருமாள்’. மாரி செல்வராஜ் எழுதி இயக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்தார். தற்போது இப்படத்தை இந்தியில் கரண் ேஜாஹர் ரீமேக் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கதிர் நடித்த வேடத்தில் சித்தார்த் சதுர்வேதி, கயல் ஆனந்தி கேரக்டரில் திரிப்தி டிம்ரி நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

வரும் ஜூலை மாதம் மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஆனால், ‘பரியேறும் பெருமாள்’ படக்குழுவினர் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது இந்தியில் கரண் ஜோஹர் இயக்கத்தில் ரன்வீர் சிங், அலியா பட் நடிக்கும் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ என்ற படம் உருவாகி வருகிறது.

The post இந்தி ரீமேக்கில் ஆனந்தி படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: