முதலமைச்சர் கோப்பை விளையாட்டில் கைப்பந்து போட்டியில் வென்ற பெண் காவலர் அணி

 

புதுக்கோட்டை, செப்.28: 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு போட்டிகளில் வீர்ரகள் பங்கேற்று தங்களை திறமையை வெளிப்படுத்தினர். இதன் ஒரு பகுதியாக அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கைப்பந்து போட்டியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 4 அணிகள் கலந்து கொண்டன.

இதில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் காவலர் அணியும், புதுகை விக்டரி அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதிபோட்டியில் புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் காவலர் அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து வெற்றி பெற்ற பெண் காவலர்கள் அணியில் இடம் பெற்ற வீர்ர்களை புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே நேரில் அழைத்து பாராட்டினார்.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டில் கைப்பந்து போட்டியில் வென்ற பெண் காவலர் அணி appeared first on Dinakaran.

Related Stories: